×

கறம்பக்குடி 8வது வார்டில் குடிநீரை உறிஞ்ச பயன்படுத்திய 4 மின்மோட்டார்கள் பறிமுதல் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை

கறம்பக்குடி, பிப். 8: கறம்பகுடி பேரூராட்சி 8வது வார்டில் மின் மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சிய 4மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடிபேரூராட்சி பகுதியில் மொத்தம் 15 வார்டுகள் அமைந்துள்ளன. ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். பேரூராட்சியில் உள்ள மக்கள் பயன் பெரும் வகையில் காந்தி பூங்காவில் பல லட்சம் கொள் ளளவு கொண்ட மேல் நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு 15வார்டு மக்கள் அனைவருக்கும் பேரூராட்சியில் மூலமாக குடிநீர் விநியோகம் செய்து வருகின்றனர்.கடந்த சில மாதங்களாகவே அப்பகுதி மக்கள் ஏராள மானோர் அனுமதியின்றி முறைகேடாக குடிநீர் இணைப்புகளில் தண்ணீர் வரும் வேளையில் மின்மோட் டார் வைத்து குடிநீரை உறிஞ்சி விடுகின்றனர் என்று பேரூராட்சி செயல் அலுவ லருக்கு புகார் வந்த வண்ணம் இருந்தது. இதன் காரணமாக பொது மக்கள் ஏராளமானோர் குடிநீர் கிடைக்காமல் அவதிபட்டனர்.
இதன் பிறகு செயல் அலுவலர் சுலைமான் சேட் உத்தரவின் படி, பேரூராட்சி பணியாளர்கள் அதிரடியாக ஆய்வில் ஈடுபட்டனர்.அப்போது பேரூராட்சி 8 வது சுலைமான்நகரில் முறைகேடாக குடிநீரை மின்மோட்டார் வைத்து உறிஞ்சி பயன் படுத்தியது தெரிய வந்தது. உடனடியாக பணியாளர்கள் 4 மின் மோட்டார்களை பறிமுதல் செய்து பேரூராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனர். மேலும் தவறாக யார் மின் மோட்டார் வைத்து பயன்படுத்தியது தெரிய வந்தால் பறிமுதல் செய்யப்படும் என்றும் அனுமதியின்றி குடிநீர் இணைப்பு பெற்று இருந் தாலும் இணைப்பு உடனடியாக துண்டிக்கப்படும் என செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED கந்தர்வகோட்டையில் நடப்பு கல்வியாண்டிலேயே ஐடிஐ திறக்க வேண்டும்